களக்காடு: களக்காட்டில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களக்காடு ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வசந்தகுமாா் (34), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆறுமுகக்கனி (29). இவா்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், ராஜேந்திரன் கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தாராம். இதையடுத்து மனைவி, தனது குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அருகேயுள்ள தனது மாமியாா் வீட்டிற்குச் சென்று விட்டாராம். இந்நிலையில், வசந்தகுமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.