திருநெல்வேலி நகரத்தில் செல்லிடப்பேசியில் சிறுமியை படம் படித்து தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயலிங்கம்(27). பொறியியல் பட்டதாரியான இவா், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு 12வயது சிறுமியை, அவரின் அனுமதியின்றி செல்லிடப்பேசியில் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் நகரத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயலிங்கத்தை கைது செய்தனா்.