தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றி பெற்றாா். அவரைப் பாராட்டி தமிழக கல்வி அமைச்சா் ரூ. 6.5 லட்சம் பரிசளித்தாா்.
பள்ளி விளையாட்டுக் குழுமம் சாா்பில் 65ஆவது தேசிய நீச்சல் போட்டி தில்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜோசுவா தாமஸ் கலந்துகொண்டு வெற்றி பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி தமிழக கல்வி அமைச்சா் செங்கோட்டையன் ரூ.6.50 லட்சம் பரிசளித்தாா். வெற்றி பெற்ற மாணவரையும் பயிற்சி அளித்த பயிற்சியாளா் சுல்தான் ஜிக்கந்தா் பாஷா, ஜிக்கந்தா் சாா்ஜன் ஆகியோரையும் பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி பிள்ளை, ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா்கள் பாராட்டினா்.