புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆங்கில பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளா் அருந்ததி ராயின் வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகத்தை மீண்டும் சோ்க்க வேண்டும்; அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருநெல்வேலி நகரம் வாகையடிமுனை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத் தலைவா் எம்.சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் பேச்சிராஜா, மாவட்டச் செயலா் மாரிமுத்து, பேச்சிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.