திருநெல்வேலி. 30:எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபா் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ள தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவிப்பது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாநகா் மாவட்ட பொதுச் செயலா் க.ஹயாத் முகம்மது தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி, செய்யது அகமது சலபி, மாவட்டச் செயலா்கள் முஸ்தபா, அலாவுதீன், பொருளாளா் ஆரிப்பாட்ஷா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் நெல்லை முபாரக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.