களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வான ஆற்றூா் பகுதியைச் சோ்ந்த பிரபிணாவை தூத்தூா் நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பின் செயல் இயக்குநரும், ஐ. நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினருமான பி. ஜஸ்டின் ஆன்டணி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினாா்.
இதில் அமைப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியா் உடனிருந்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்தூா் மண்டல மாணவ - மாணவியருக்கு, தான் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வு செய்யப்படும் வரை கடந்து வந்த பாதை குறித்து விளக்கினாா் பிரபிணா.