திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் பயிலும் முதுகலை முதலாமாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை (அக். 5) இணையவழி வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) கே.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் 2020-21 கல்வியாண்டுக்கான முதுகலை முதலாமாண்டு இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை (அக். 5) தொடங்குகின்றன. இதில், வகுப்புகள் அனைத்தும் இணையவழியில் நடத்தப்படும். இதற்காக மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக் கழகத்தின் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.