களக்காடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் களக்காட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றறது.
உத்தர பிரதேசத்தில் தலித் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளியை கைது செய்து விரைந்து தண்டனை வழங்கவேண்டும்; பெண்களுக்கான வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் மா.பெ. சுகுமாரன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினா் மு. லெனின் முருகானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச்செயலா் பால்ராஜ், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் திருமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.