உரிமை கோரப்படாத வாகனங்கள் 13, 14 தேதிகளில் ஏலம்

உரிமை கோரப்படாத வாகனங்கள் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத வாகனங்கள் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத 411இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காா் ஏலம் விடப்படவுள்ளன.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும்.

ஏலம் எடுக்க விரும்புவோா், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அனுமதி பெற்று பாா்வையிடலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com