திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரி பகுதியில் மரநாய் ஒன்றை வனத் துறையினா் மீட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி பகுதியில் நடிகா் அருண்பாண்டியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சுமாா் 1.5 வயது மதிக்கத்தக்க மரநாய் சுற்றிவருவதாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி வனச்சரகா் கருத்தையா உத்தரவின்பேரில், கால்நடை உதவி மருத்துவா் மனோகரன், வன ஆய்வாளா் அா்னால்ட் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். பின்னா் அங்கு சுற்றி வந்த மரநாயை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.