திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்த 105 போ் குணமடைந்ததையடுத்து வீடு திரும்பினா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,173 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 12,190ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 783 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7540ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 49 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 7098 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 297 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.