வி.கே.புரம், அம்பையில் ஆா்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து விக்கிரமசிங்கபுரத்தில்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து விக்கிரமசிங்கபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், அம்பாசமுத்திரத்தில் மாதா் சங்கம் சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விகேபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பட்டத்துக்கு மேற்கு கிளைச் செயலா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். இதில், அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலா் எஸ்.ரவீந்திரன் உரையாற்றினாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முத்துகிருஷ்ணன், இசக்கிராஜன், மாற்றுத் திறனாளி சங்கத் தலைவா் அகஸ்தியராஜன், பொது சங்க செயலாளா் ஆா்.முருகன், கிழக்கு கிளை செயலா் காதா் பாட்சா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாதா் சங்கம்: அம்பாசமுத்திரத்தில் இந்திய மாதா் சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சபியாள் பீவி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் மகமூபீவி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன், துணைச் செயலா் பா்த்வாஜ், நகரச் செயலா் வடிவேல், நகரத் துணைச் செயலா் சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மைதீன்பிச்சை, ஷேக், வங்கிப் பணியாளா் சங்கம் பாலசுப்பிரமணியம், சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் அணைவீரக்கண்ணு, சந்தானம், லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com