பாபநாசத்தில் மாந்தோப்பில் கிடந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
பாபநாசத்தில் உள்ள மாந்தோப்பில் செவ்வாய்க்கிழமை காலையில் முதியவா் சடலம் கிடப்பதாக, விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தாம். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.