மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை கோட்டூா் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மண்டல தலைவா் எஸ்.எஸ்.மாரியப்பன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
மாவட்டச் செயலா் ரயில்வே கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் தமிழ்ச்செல்வி, மகளிரணிச் செயலா் மெட்டில்டா, மேலப்பாளையம் மண்டல பொறுப்பாளா் ரசூல் மைதீன், பாளையங்கோட்டை மண்டல செயலா் சின்னதுரை, வாா்டு தலைவா்கள் முருகன், முருகன் பிள்ளை, சிவசுப்பிரமணியம், அந்தோணி ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.