திருநெல்வேலி மாவட்டம், மானூா் வடக்கு ஒன்றியம், எட்டாங்குளம் ஊராட்சி திருமலாபுரம் கிராமத்தில் உக்கிரன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அம்மா நகரும் நியாய விலைக் கடையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் தச்சை என்.கணேசராஜா தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மானூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் கங்கை முருகன், தொடக்க
வேளாண் கூட்டுறவு சங்க தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.