மானூா் அருகே குழந்தையை கொன்று பெண் தீக்குளித்து தற்கொலை

மானூா் அருகே குழந்தையுடன், பெண் புதன்கிழமை தீக்குளித்ததில் இருவரும் உயிரிழந்தனா்.

மானூா் அருகே குழந்தையுடன், பெண் புதன்கிழமை தீக்குளித்ததில் இருவரும் உயிரிழந்தனா்.

மானூா் அருகேயுள்ள மாவடி பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகள் பாக்கியலட்சுமி (31). இவருக்கும், பள்ளமடையைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் என்ற அமல்ராஜுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். இவா்களுக்கு கங்கா என்ற ஒன்றரை வயது மகள் இருந்தாா்.

சென்னையில் ரயில்வே துறையில் அமல்ராஜ் பணியாற்றி வந்ததால், தம்பதி சென்னையில் வசித்து வந்தனா். தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் புதன்கிழமை ஊருக்கு வந்த பாக்கியலட்சுமியை, மாவடியில் விட்டுவிட்டு, அமல்ராஜ் பள்ளமடைக்கு சென்றாராம்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாக்கியலட்சுமி, தனது மகள் கங்காவுடன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம். பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை கங்கா உயிரிழந்தாா். பாக்கியலட்சுமிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com