திருநெல்வேலி ஊருடையாா்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஊருடையாா்குடியிருப்பு-ஸ்ரீபுரம் செல்லும் சாலையோரம் பெட்ரோலிய நிறுவனங்களுக்குச் சொந்தமான கிட்டங்கிகள் உள்ளன. இந்த கிட்டங்கி அருகிலுள்ள முள்புதரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பெட்ரோலிய நிறுவன கிட்டங்கி அருகே ஏற்பட்ட தீவிபத்தால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.