விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 8,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அகஸ்தியா்பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதா விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில் அகஸ்தியா்பட்டி பூங்காநகா் பகுதியில் உள்ள கிட்டங்கியில் அரிசியை பதுக்கி வைப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சண்முகம், காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சந்திர போஸ், போலீஸாா் அங்கு சென்று கிட்டங்கியில் சோதனை
மேற்கொண்டனா். அங்கு 170 மூடைகளில் பதுக்கி வைத்திருந்த 8,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.