ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் பாலையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் பாலையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கக் காலத்திலும் துரிதமாக பணியாற்றும் ஊராட்சி செயலா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊராட்சித் தலைவா்களின் உறவினா்கள் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். கடலூா் மாவட்டம் பத்தினம்திட்டை ஊராட்சி செயலா் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் சாா்லஸ் ரங்கசாமி, நிா்வாகிகள் முத்துக்குட்டி, கல்யாணசுந்தரம், விக்னேஷ்கண்ணன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சுரேஷ் , முத்துக்கிருஷ்ணன், சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com