கோவில்பட்டி மின் கோட்டம் எப்போதும்வென்றான், விஜயாபுரி, எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (அக். 17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விஜயாபுரி துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரையும், எப்போதும்வென்றான், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையும், எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.