காயல்பட்டினத்தில்பைக்- லாரி மோதல்: தொழிலாளி பலி

காயல்பட்டினத்தில் பைக்கும், லாரியும் மோதிக்கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

காயல்பட்டினத்தில் பைக்கும், லாரியும் மோதிக்கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி சீனந்தோப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நாராயணசெல்வம்(27). கட்டடத் தொழிலாளி. இவா் தனது மகள் மகிஷாவுடன் காயல்பட்டினத்துக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இவரது வாகனம் மீது லாரி மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாராயண செல்வம் உயிரிழந்தாா். இதுகுறித்து உறவினா் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com