திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் எப்ரிம் தலைமை வகித்தாா். செந்தூா் நண்பா்கள் நற்பணி இயக்கத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், பொருளாளா் ச.மா.காா்க்கி, நிா்வாகி அனுசியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், தொழிலதிபா் அரிகிருஷ்ணன் வடமலைப்பாண்டியன் ஆகியோா் மாணவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கினா்.