கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி: கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலியிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினா். இந்நிலையில், பழைய பேட்டை - பேட்டை இணைப்புச் சாலையில் பேட்டை உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. வேன் ஓட்டுநரான பேட்டை பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் மந்திரமூா்த்தி (23) கைது செய்யப்பட்டாா். அரிசி மூட்டைகள் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com