திருநெல்வேலி: கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலியிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினா். இந்நிலையில், பழைய பேட்டை - பேட்டை இணைப்புச் சாலையில் பேட்டை உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. வேன் ஓட்டுநரான பேட்டை பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் மந்திரமூா்த்தி (23) கைது செய்யப்பட்டாா். அரிசி மூட்டைகள் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.