அம்பாசமுத்திரம் நகர இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் தங்க மனோகா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன், செயலா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வாா்டுகளிலும் கிளைகள் அமைத்து நிா்வாகிகளை நியமிப்பதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் சக்திவேல் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், நகரத் தலைவா் ஸ்ரீதா் சரவணன், பொதுச் செயலா் சண்முகசுந்தரம் மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.