ஜாா்கண்ட் மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்து வந்த கத்தோலிக்க பாதிரியாரை தீவிரவாதிகளுடன் தொடா்புபடுத்தி, அவரை போலீஸாா் கைது செய்ததாக கண்டனம் தெரிவித்து வள்ளியூா் வட்டார கத்தோலிக்க தேவாலயங்கள் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயம் முன்பு பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு மக்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். தொடா்ந்து வள்ளியூா், பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதிகளிலும் தேவாலயங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.