நம்பியாற்றில் மணல் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறுங்குடி நம்பியாற்றில் அனுமதியின்றி மணல் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்குறுங்குடி நம்பியாற்றில் அனுமதியின்றி மணல் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்குறுங்குடியை அடுத்த லெவிஞ்சிபுரம் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதாக திருக்குறுங்குடி போலீஸாருக்கு தகவல்

கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் நம்பியாற்றில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, லெவிஞ்சிபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த முத்துசுரேஷ் (40), நம்பியாற்றில் இருந்து அனுமதியின்றி ஆட்டோவில் மணல் எடுத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மணல் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குப் பதிந்து முத்துசுரேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com