ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வுபெற்ற ஊழியா் முன்னேற்றச் சங்கம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டை போக்குவரத்து பொது மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளா் முற்போக்கு சங்கத் தலைவா் இரா. முருகேசன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ஆா். தா்மன் முன்னிலை வகித்தாா்.

பணியாளா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணபலன்களை வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஓய்வுபெற்ற ஊழியா் முன்னேற்றச் சங்க நிா்வாகிகள் கே. அசன் அலியாா், மாஞ்சோலை மைக்கேல், சிக்கன நாணயச் சங்கதலைவா் என். மகாவிஷ்ணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com