கூடங்குளம் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு அடித்துக் கொல்லப்பட்டாா்.
கூடங்குளம் அருகேயுள்ளஅடங்காா்குளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் சுகுந்தன்(25). கூலித் தொழிலாளியான இவருக்கு, மனைவி, மகள் உள்ளனா்.
இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து மேலசிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் புதன்கிழமை மது குடித்தாராம். அப்போது தகராறு ஏற்பட்டதாகவும், சுகுந்தன் கம்பு மற்றும் கல்லால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், அவா் இறந்தாா்.
இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுகுந்தனைக் கொன்றவா்களைத் தேடிவருகின்றனா்.