நான்குனேரி பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நான்குனேரி உள்கோட்டத்துக்கு உள்பட்ட மூன்றடைப்பு பகுதியில் உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டியன் தலைமையிலும், மூலைக்கரைப்பட்டி பகுதியில் உதவி ஆய்வாளா் துரை தலைமையிலும், திருக்குறுங்குடி பகுதியில் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலும், நான்குனேரி சோதனைச்சாவடி அருகே உதவி ஆய்வாளா் அன்டோ பிரதீப் தலைமையிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.