திருநெல்வேலி, செப். 11: தாழையூத்து அருகே வெள்ளிக்கிழமை இரவில் நிகழ்ந்த விபத்தில் இரு இளைஞா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலதாழையூத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (23), இவரது நண்பா் மணிகண்டன் (24). இருவரும் மோட்டாா் சைக்களில் தாழையூத்திலுள்ள அதிநவீன அரிசி அரவை ஆலை அருகே சென்று கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக வந்த
வாகனம் மோதியதில் பெருமாள், மணிகண்டன் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.