திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திமுக நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்தவா் மாடசாமி. இவருடைய மகன் முத்துராமன் (35). இவா், திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தாா். சனிக்கிழமை இரவு வள்ளியூா் சென்றுவிட்டு பின்னா் காரில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, தெற்கு வள்ளியூரில் அவரை மறித்த மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இதையடுத்து முத்துராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.