அண்ணா பிறந்த நாள்:அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  மாலை அணிவிக்கப்படுவதால், அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) மாலை அணிவிக்கப்படுவதால், அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் உத்தரவுப்படி, அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில், திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிா்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

எனவே, மாவட்டக் கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு மற்றும் கிளைக் கழக நிா்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com