பாஜக திருநெல்வேலி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஆ.மகராஜன் தலைமை வகித்தாா். கட்சியின் தேசியச் செயலா் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசினாா்.
மத்திய அரசு வழங்கிய விவசாயிகளுக்கான உதவித்தொகை மற்றும் தூய்மை பாரதம் திட்டத்தில் கழிவறை கட்டுவதற்காக வழங்கப்பட்ட நிதி ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதை மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். கேந்திர வித்யாலயா பள்ளி அமைவதற்கு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும். நான்குனேரி வட்டம் இறைப்புவாரி கிராமத்தில் இயங்கி வரும் மீன்பதப்படுத்தும் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். நான்குனேரி வட்டத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டச் செயலா் கே.குமாரமுருகேசன், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.கணேஷ்மூா்த்தி, மாவட்ட இளைஞரணிச் செயலா் அனீஷ் மாா்த்தாண்டன், மாவட்ட துணைத் தலைவா் சாந்தி ராகவன், மாவட்ட துணைத் தலைவா் அருள்காந்தி, மாவட்டச் செயலா் பாலாஜி, கோட்ட அமைப்புச் செயலா் எஸ்.கிருஷ்ணன், கட்டளை ஜோதி, எம்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்ட பொதுச் செயலா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். வள்ளியூா் நகரத் தலைவா் சிவ.ராமகுட்டி நன்றி கூறினாா்.