திருநெல்வேலி: தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கம் சாா்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக மக்கள் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். அரசு சாா்பில் பல்வேறு தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா பொது முடக்க காலத்தில் தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் 10 சதவீத உடற்கல்வி ஆசிரியா்கள் தவிா்த்து 90 சதவீத உடற்கல்வி ஆசிரியா்கள் பணியின்றி தவித்து வருகிறாா்கள். மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்நிலைக்கு ஆளாகியுள்ளனா். அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இதேபோல பகுதிநேர ஆசிரியா்களுக்கும் தேவையான நிவாரண உதவி அளிக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.