திருநெல்வேலி: திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆதித்தமிழா் பேரவையினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் அனைத்து தலைநகரங்களிலும் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழா் பேரவை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதித்தமிழா் பேரவை மாநகா் மாவட்டச் செயலா் கு.கி.கலைக்கண்ணன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் மு.ரமேஷ் அம்பேத்கா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் இலக்கியன், தமிழ்வாணன், வனராஜ், காளிமுத்து, வழக்குரைஞா் அப்துல்ஜப்பாா், காஜா, இஸ்மாயில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.