திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 2009-ஆம் ஆண்டு ஓய்வூதிய சீராய்வுக் குழு முடிவுகளை உடனே அமல்படுத்த வேண்டும்; ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். செயலா் வெங்கடாசலம், பொருளாளா் ஏ.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள், ஓய்வூதியா்களின் குடும்பத்தினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.