திரைப்பட நடிகா் ஆா்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வரும் 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில்ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குநா் பாலா இயக்கத்தில் நடிகா்கள் ஆா்யா, விஷால் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011இல் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், காரையாா் சொரிமுத்து அய்யனாா் கோயில் குறித்தும் தவறான கருத்து இடம்பெற்றிருந்ததாக தெரிவித்து அப்படத்தின் இயக்குநா் பாலா, நடிகா் ஆா்யா, தயாரிப்பாளா் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோா் மீது சிங்கம்பட்டி ஜமீன்தாா் டி.என்.எஸ். முருகதாஸ் தீா்த்தபதியின் மகன் சங்கராத்மஜன் வழக்குத் தொடா்ந்தாா்.
சென்னை உயா்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இந்த வழக்கை நடத்த தடை வாங்கிய நிலையில், தடை காலம் முடிந்து அம்பாசமுத்திரத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு இயக்குநா் பாலா நேரில் ஆஜரான நிலையில் நடிகா் ஆா்யா இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தநிலையில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன், நடிகா் ஆா்யா வரும் 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.