திருநெல்வேலி: இந்திய ரயில்வே தொழிலாளா் கூட்டமைப்பு ஏஐசிசிடியூ சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் கொள்கைகளை எதிா்த்து ஏஐசிசிடியூ சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, இந்திய ரயில்வே தொழிலாளா் கூட்டமைப்பு-ஏஐசிசிடியூ சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐசிசிடியூ திருநெல்வேலி மாவட்ட பொதுச்செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சங்கரபாண்டியன், புரட்சிகர இளைஞா் கழக மாநில துணைத் தலைவா் சுந்தர்ராஜன், மாவட்ட கமிட்டி உறுப்பினா்கள் கருப்பசாமி, ரவிடேனியல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.