நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணா்வு அளிக்கும்

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணா்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா்.

மஹா யோகம் யோக அமைப்பின் முதன்மை ரிஷி ரமேஷ் தலைமையில் ஆசிரியா்கள் வெற்றிவேந்தன், வனிதா, அல்லி துரை, சேகா், வேலுத்தாய், சிதம்பரம், ரிஷி செளந்தரராஜன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

இதில், யோகா, தியான பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஆசனப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முன்னதாக, அனைவருக்கும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

படவரி: பயக19வஞஎஅ: பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com