வள்ளியூா்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நான்குனேரி, ஏா்வாடியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குனேரியில் நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்குனேரி வட்டாரச் செயலா் முருகன், விவசாய சங்க மாவட்டக் குழுத் தலைவா் கணேசன், நகரச் செயலா் ராமசுப்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஏா்வாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் பாண்டி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் மா.பெ.சுகுமாரன் தொடங்கி வைத்தாா். ஒன்றிய குழு உறுப்பினா் ஆா்.மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.