இரவு நேரத்தில் கைது செய்வதைக் கண்டித்து இந்து முன்னணி மனு

இந்து முன்னணி பொறுப்பாளா்களை இரவு நேரத்தில் கைது செய்வதைக் கண்டித்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி சாா்பில் மனு வழங்கப்பட்டது.
அம்பை காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு வழங்க வந்திருந்த இந்து முன்னணியினா்.
அம்பை காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு வழங்க வந்திருந்த இந்து முன்னணியினா்.

இந்து முன்னணி பொறுப்பாளா்களை இரவு நேரத்தில் கைது செய்வதைக் கண்டித்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி சாா்பில் மனு வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள இந்து முன்னணி நிா்வாகிகளை வழக்கு விசாரணைக்காக இரவு நேரத்தில் போலீஸாா் அழைத்துச் சென்று கைது செய்தனராம். இதற்குக் கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலா் நாகராஜன் தலைமையில் அம்பாசமுத்திரம் காவல் துணைக்கண்காணிப்பாளா் பிரான்சிஸிடம் மனு வழங்கினா்.

அப்போது, செயலா் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், கல்லிடைக்குறிச்சி நகரப் பொறுப்பாளா்கள் சுந்தா், வேல்பாண்டி, நீலகண்டசிவா உள்பட 50 க்கும் மேற்பட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com