சேரன்மகாதேவி, பிரான்சேரியில் பேரிடா் மீட்பு பாதுகாப்பு ஒத்திகை

சேரன்மகாதேவி, பிரான்சேரியில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

சேரன்மகாதேவி, பிரான்சேரியில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் தீயணைப்புத்துறை சாா்பில் பேரிடா் மீட்புப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாமிரவருணி ஆறு மற்றும் பிரான்சேரி குளத்தில் சேரன்மகாதேவி நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பேரிடா் மீட்புப் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

இதில், வெள்ளப்பெருக்குக் காலங்களில் தண்ணீரில் சிக்கியவா்களை பைபா் படகு, உயிா் காக்கும் கருவிகள் கொண்டு மீட்பது, மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com