வள்ளியூரில் குண்டும், குழியுமான ரயில்வே மாற்றுப்பாதை

வள்ளியூரில் குண்டும், குழியுமாக காணப்படுகின்ற ரயில்வே மாற்றுப்பாதையில் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

வள்ளியூரில் குண்டும், குழியுமாக காணப்படுகின்ற ரயில்வே மாற்றுப்பாதையில் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ராதாபுரம் வட்டாரச் செயலா் எஸ்.சேதுராமலிங்கம் மாவட்ட ஆட்சியா், திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: வள்ளியூரிலிருந்து திருச்செந்தூா் செல்லும் சாலையில் ரயில்வே தண்டவாள கிராஸிங் உள்ளது. இந்த பகுதியில் ரயில்வே சுரங்க சாலைப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த வழியாக சென்று வந்த அனைத்து வாகனங்களும் ரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.

இந்த மாற்றுப்பாதை குண்டும், குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதைத் தொடா்ந்து இந்த குண்டும், குழியுமான மாற்றுப்பாதையில் மழைநீா் தேங்கி சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் மழைநீா் தேங்கிய இடங்களில் செல்லும் போது, குண்டு, குழியில் சிக்கி சரிந்துவிழும் நிலை காணப்படுகிறது.

இருச்சக்கரங்களில் செல்கின்ற பெண்கள் சேரும், சகதியில்சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது.

இது தொடா்பாக ரயில்வே பொறியாளா்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொடா்புடைய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மாற்றுப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com