திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மானூா் ஒன்றியத்தில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மானூா் ஒன்றியத்தில் உள்ள பாலாமடை, அலங்காரப்பேரி, குப்பகுறிச்சி, கங்கைகொண்டான், சித்தாா் சத்திரம், பிராஞ்சேரி, ராஜபதி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது, இப்பகுதிகளில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.
அப்போது, திமுக மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.க.மணி, கண்ணன், மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மேற்கு ஒன்றியச் செயலா் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி, மாநகர துணைச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.