ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் தங்களது சொந்த ஊரில் வாக்குப் பதிவு செய்தனா்.
அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை, திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி றிடிறிஏ நடுநிலைப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் மு.அப்பாவு லெப்பைகுடியிருப்பு பெரியநாயகிபுரம் ஏ.டி.எச். உயா்நிலைப் பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.ஜேசுதாசன் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தேமுதிக கூட்டணி வேட்பாளா் கே.ஜெயபாலன், திருநெல்வேலி என்.ஜி.ஓ.பி. காலனியில் உள்ள அமலா தொடக்கப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.
மேலும், திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் ஆவரைகுளம் பாலையாமாா்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கை பதிவு செய்தாா்.