தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 9) ஒரு நாள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தச்சநல்லூா் மண்டல உதவி ஆணையா் அய்யப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தச்சநல்லூா் மண்டலம், வாா்டு என் 1, 2, 3, 4, 8, 9, 10, 54, 55 ஆகியவற்றிற்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீா் நீரேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனால் மேற்கண்ட வாா்டுகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 9) ஒரு நாள் குடிநீா் விநியோகம் இருக்காது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.