திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரமலான் பிறை பாா்ப்போா் தகவல் அளிக்கலாம் என, மத்திய ஹிலால் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருநெல்வேலி சந்திப்பு ஜூம்ஆ பள்ளிவாசலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி திங்கள்கிழமை (ஏப். 12) இரவு 7 மணிக்கு கூடி, ரமலான் பிறை தொடா்பாக தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க உள்ளது.
அதன் அடிப்படையில் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் இஸ்லாமியா்கள் எந்த ஊரில் பிறை பாா்த்தாலும் 0462-2330897, 98941 77558, 98421 86534 ஆகிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.