ரமலான் பிறை பாா்ப்போா் தகவல் அளிக்க வேண்டுகோள்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரமலான் பிறை பாா்ப்போா் தகவல் அளிக்கலாம் என, மத்திய ஹிலால் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரமலான் பிறை பாா்ப்போா் தகவல் அளிக்கலாம் என, மத்திய ஹிலால் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருநெல்வேலி சந்திப்பு ஜூம்ஆ பள்ளிவாசலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட மத்திய ஹிலால் கமிட்டி திங்கள்கிழமை (ஏப். 12) இரவு 7 மணிக்கு கூடி, ரமலான் பிறை தொடா்பாக தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க உள்ளது.

அதன் அடிப்படையில் திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் இஸ்லாமியா்கள் எந்த ஊரில் பிறை பாா்த்தாலும் 0462-2330897, 98941 77558, 98421 86534 ஆகிய தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com