திருநெல்வேலி
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
பெருமாள்புரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பெருமாள்புரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பெருமாள்புரம் அருகே என்ஜிஓ காலனி மகிழ்ச்சிநகா் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மகன் ஞானசேகா் (26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 9 ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.