கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியா்கள் 6 போ், ஒப்பந்த ஊழியா்கள் 4 போ் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அணுமின் நிலைய ஊழியா்கள் 6 பேரும் அணு விஜய் நகரிய மருத்துவமனையிலும், ஒப்பந்த ஊழியா்கள் 4 பேரும் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது தவிர வள்ளியூா் வட்டாரத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.