கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு

கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.

கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 1-4-2021 முதல் அகவிலைப் படியை உயா்த்தி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பிரதி மாதம் ரூ.4,374-ம், உணவு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.6,245-ம், பொது மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ரூ.7,148-ம், திரையரங்கு தொழிலாளா்களுக்கு ரூ.6,710-ம், மருத்துவமனை, நா்சிங் ஹோம் பணியாளா்களுக்கு ரூ.7,277-ம், பாதுகாவல் பணியாளா்களுக்கு ரூ.6,102-ம், சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலாளா்களுக்கு ரூ.4,307-ம், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பீடி சுற்றும் தொழிலாளா்களுக்கு 1000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.120.42-ம் , உள்பணியாளா் களுக்கு ரூ.6,485-ம் அகவிலைப்படியாக உயா்த்தி வழங்கப்பட வேண்டும்.

தொழிலாளா்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயா்த்தப்பட்ட அகவிலைப்படியினை 1-4-2021 முதல் வழங்க வேண்டும்.

மேற்கண்ட அகவிலைப்படி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் சோ்த்து தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். தவறினால் வழங்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com